ஏட்டினிலே படித்ததுண்டு
கடவுள் வாழ்த்து
எங்காவது படித்ததுண்டாஆசிரியர் வாழ்த்து...
படைத்தலும் காத்தலும்
இறைதொழில் என்றால்
அவை இன்னதென்று
கற்பித்தவர் ஆசிரியரன்றோ....!
நிலவையே பொம்மையாக்கி
பசியாற்றும் அன்னையரே
அந்நிலவினிலே உட்பொருளை
உணர்த்தியவர்
உமக்கும் நிகரன்றோ....!
கற்க கசடற
வள்ளுவன் வாக்கு
அக்கற்றலையும் கற்பித்தவர்
ஆசிரியரன்றோ....!
அறிவும் தெளிவும்
மானுடத்தின் சிகரமாம்
அவ்விரண்டையும் உணர்த்தியவர்
ஆசிரியரெனும் படிகளன்றோ....!
ஆதலால்
துதிக்கின்றேன் உம்மை
ஆசிரியரே.....
No comments:
Post a Comment