மனிதா...!
பறவைகளின் சரணாலயம்
என்னில்....
பாவங்களின் சாக்கடை
உன்னில்...
மனிதனின் சுவாசம்
என்னில்...
மண்ணின் பேராசை
உன்னில்...
நிழல்களின் கூடாரம்
என்னில்...
நிலையற்ற மனம்
உன்னில்...
வேர்களின் ஊடுருவல்
என்னில்...
வேதனையின் சங்கமம்
உன்னில்...
ஆகவே மனிதா...!
என் ஒருவனை
வெட்டும் முன்
ஓராயிரம் மரங்களை
நடு...
இதுவே
உன் குறைந்தபட்ச்ச
பரிகாரம்....
No comments:
Post a Comment