Friday, July 20, 2012

உவமை


கார்மேகம் வண்ணம் 
உன் கூந்தல் 
என்றேன்...
நிலவின் வடிவம் 
உன் முகம் 
என்றேன்...
மல்லிகையின் வெண்மை 
உன் மனம் 
என்றேன்...
வானவில்லின் வளைவு 
உன் இடை 
என்றேன்... 
தாமரையின் மொட்டுக்கள் 
உன் பாதம் 
என்றேன்...
பூவின் மென்மை
உன் தேகம் 
என்றேன்...
இன்று...
நீ  என்னவள் 
இல்லை...
இருந்தும் இவையெல்லாம் 
உவமையாக தொடர்கிறேன் 
என் அடுத்த 
காதலிக்கு..... 

No comments: