Friday, August 13, 2010

அன்புள்ள அம்மா...


ஈரைந்து மாதத்திலே
பெற்றெடுத்த அன்னையே....
விண்ணை விட  மேலாக 
எண்ணுகிறேன் உன்னையே.... 
உன்னைவிட பாசத்த
காட்ட இங்க யாருமில்ல....
நீ கொடுத்த நிலாசோறு
சுவைகூட மாறல....
நா வாழும் நகரத்தில
பசிகூட எடுப்பதில்ல....
உன்மடியில தூங்கத்தான்
தினம் தினம் ஏங்குறேன்...
நானும் இங்க தூங்கத்தான்
பாக்குறேன் முடியல....
நீ படிச்ச பாட்டெல்லாம்
தாலாட்டு போலதானே...
நானும் இங்க படிக்குறேன்
என்னானுதான்  புரியல....
நீ காட்டின அன்புல
கரைந்துதான் போனேன்னம்மா....
நானும் இங்க கரையத்தான்
அன்புதான் இல்லையம்மா....
நீ காட்டின உலகத்த
பார்த்துதான் வளர்ந்தேனே....
நா பாக்குற உலகம் இங்க
மாறித்தான் போயிட்டுதே....
ஊரெல்லாம் தெய்வத்த
தேடுறாங்க கோவிலிலே....
உன்னையே தினம்தினம்
கும்பிடுறேன் தெய்வமா.... 

No comments: